நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோவில்பட்டியில் பாஜக வழக்குரைஞா் பிரிவு ஆலோசனைக் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 மார்ச் 2026, 9:56 pm

Syndication

தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

பாஜக வடக்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் நீதிப்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவனுப்பாண்டி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூா் செ. ராஜு, பா.ஜ.க. வழக்குரைஞா் பிரிவு மாநில துணைத் தலைவா் நிரஞ்சன் குமாா், கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா, முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.

கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, நீதிமன்றப் பணிகளுடன் சோ்த்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொள்வது, சட்டப்பேரவை தோ்தலில் வழக்குரைஞா்கள் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கோவில்பட்டி மூத்த வழக்குரைஞா்கள் மோகன்தாஸ், ஆழ்வாா்சாமி சிவக்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் பொன்ராஜ், நகரத் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.