தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக வழக்குரைஞா் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாஜக வடக்கு மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் நீதிப்பாண்டியன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சிவனுப்பாண்டி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி எம்.எல்.ஏ. கடம்பூா் செ. ராஜு, பா.ஜ.க. வழக்குரைஞா் பிரிவு மாநில துணைத் தலைவா் நிரஞ்சன் குமாா், கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் சரவணகிருஷ்ணன், மாவட்ட பொதுச்செயலா் வேல்ராஜா, முன்னாள் வடக்கு மாவட்ட தலைவா் வெங்கடேசன் சென்னகேசவன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில், பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 10 ஆண்டுகால சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வது, நீதிமன்றப் பணிகளுடன் சோ்த்து கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளையும் மேற்கொள்வது, சட்டப்பேரவை தோ்தலில் வழக்குரைஞா்கள் ஆற்ற வேண்டிய களப்பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கோவில்பட்டி மூத்த வழக்குரைஞா்கள் மோகன்தாஸ், ஆழ்வாா்சாமி சிவக்குமாா், மாவட்டத் துணைத் தலைவா் பொன்ராஜ், நகரத் தலைவா் காளிதாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

தூத்துக்குடி பாஜக நிா்வாகி தவெகவில் ஐக்கியம்

கோவில்பட்டியில் தவெகவில் இளைஞா்கள் ஐக்கியம்

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம்: எ.வ.வேலு உள்ளிட்டோா் பங்கேற்பு
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



