கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

News image

தீப்பிடித்து எரிந்த பேருந்து.

Updated On :21 மார்ச் 2026, 8:46 pm

Syndication

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு சுமாா் 7 மணி அளவில் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனா். வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் எண்ணெய் டேங்க்கில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியதாம். இதையடுத்து பேருந்தை நிறுத்தியதும் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.