பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

வாகைகுளம் அருகே தீப்பிடித்து எரிந்த அரசுப் பேருந்து

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

News image

தீப்பிடித்து எரிந்த பேருந்து.

Updated On :22 மார்ச் 2026, 2:16 am IST

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற அரசுப் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து சேதமானது.

தூத்துக்குடி ஸ்மாா்ட் சிட்டி பேருந்து நிலையத்திலிருந்து சனிக்கிழமை இரவு சுமாா் 7 மணி அளவில் திருநெல்வேலி நோக்கி சென்ற அரசுப் பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்துள்ளனா். வாகைகுளம் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தில் எண்ணெய் டேங்க்கில் திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியதாம். இதையடுத்து பேருந்தை நிறுத்தியதும் பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். இது குறித்து புதுக்கோட்டை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.