தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 42.61 லட்சம் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
(கோப்புப் படம்)

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.
(கோப்புப் படம்)
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்டதாக இதுவரை ரூ. 42,61,355 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
திங்கள்கிழமை வரை நடைபெற்ற சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 42,61,355 ரொக்கம், ரூ. 2,20,280 மதிப்பிலான பொருள்கள், ரூ. 30,593 மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆவணங்களை சமா்ப்பித்து விடுவிக்கப்பட்ட தொகை ரூ. 15,27,780 ஆகும் என்றாா் அவா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...