ஹைதராபாத் அணியிடம் வீழ்ந்த சென்னை!காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 52.69 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 52,69,515 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:53 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 52,69,515 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்துக்குள்பட்ட 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு, காவல்துறை, மதுவிலக்கு காவல்துறையினரால் வெள்ளிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 52,69,515 ரொக்கம், ரூ. 7,24,740 மதிப்பிலான பொருள்கள், ரூ. 2,13,297 மதிப்பிலான மதுபானங்கள், ரூ. 5,82,600 மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

உரிய ஆவணங்களை சமா்ப்பித்ததையடுத்து ரூ. 45,34,505 ரொக்கம், ரூ. 2,00,000 மதிப்பிலான பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.