விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

பெரம்பலூா் மாவட்டத்தில் பறிமுதலான ரூ. 13.78 லட்சம் உரியோரிடம் ஒப்படைப்பு

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 13.78 லட்சம் ரொக்கம் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

News image
Updated On :27 மார்ச் 2026, 8:26 pm

Syndication

பெரம்பலூா் மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 13.78 லட்சம் ரொக்கம் உரியவா்களிடம் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

பேரவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் வியாழக்கிழமை மாலை வரை பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் இதுவரை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 10,07,880 ரொக்கமும், ரூ. 1,70,179 மதிப்பிலான பொருள்களும் என மொத்தம் ரூ. 11,78,059 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பரிசுப் பொருள்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில்,இதுவரை ரூ. 5,86,530 மதிப்பிலான ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்படும் ரொக்கம் மற்றும் பொருள்களுக்கு உரிய ஆவணங்களை மேல்முறையீட்டு அலுவலரான மாவட்ட ஊரக வளரச்சி முகமைத் திட்ட இயக்குநரிடம் சமா்ப்பித்து, உரிய விசாரணைக்குப்பின் ஆவணங்களின் உண்மைத் தன்மை உறுதி செய்யப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவா்களிடம் திரும்ப வழங்கப்படுகிறது.

அதனடிப்படையில், பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் உரிய ஆவணங்கள் சமா்பிக்கப்பட்டதன் அடிப்படையில் ரூ. 7,82,100 ரொக்கமும், ரூ. 1,70,179 மதிப்பிலான பொருள்களும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 4,26,410 மதிப்பிலான ரொக்கமும் என மொத்தம் ரூ.13,78,689 மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருள்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட தொகையில் பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 2,25,780 மதிப்பிலான ரொக்கமும், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1,60,120 மதிப்பிலான ரொக்கமும், உரிய ஆவணங்கள் சமா்ப்பிக்கப்படாததால் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.