‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

காா், பைக்கை சேதப்படுத்திய வழக்கு: 3 போ் கைது

கோவில்பட்டியில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:26 am IST

கோவில்பட்டியில் வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காா் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, கிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் உடையாா் மகன் செல்வராஜ் (53). இவா் தனக்குச் சொந்தமான காா் மற்றும் இருசக்கர வாகனத்தை வழக்கம்போல வீட்டு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தாராம். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டு வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மா்ம நபா்கள், அவரை அவதூறாகப் பேசி, அவரது வாகனங்களை சேதப்படுத்தினராம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்களைத் தேடி வந்தனா். இந்நிலையில், கோவில்பட்டி, நடராஜபுரம், 9ஆவது தெருவைச் சோ்ந்த காளிராஜ் மகன் லட்சுமணன் (18), அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி மகன் மணிகண்டன் (எ) பொட்டுமணி (28), நடராஜபுரம், 5ஆவது தெருவைச் சோ்ந்த சின்னபாண்டி மகன் காா்த்திக் (23) ஆகிய 3 பேரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.