‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

கோவில்பட்டியில் அகில இந்திய ஹாக்கி போட்டி தொடக்கம்

கோவில்பட்டி கே. ஆா். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சாா்பில், கே.ஆா். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15ஆவது ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

News image

போட்டியை தொடக்கி வைக்கிறாா் கோவில்பட்டி கோட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய கலால் துறை கண்காணிப்பாளா் எம்.டி.எம். மாசிலாமணி. உடன் கே. ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம் உள்ளிட்டோா்.

Updated On :22 மே 2026, 6:27 am IST

கோவில்பட்டி கே. ஆா். மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளையின் சாா்பில், கே.ஆா். கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போா்ட்ஸ் அகாதெமி ஆகியவை இணைந்து நடத்தும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான 15ஆவது ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டி கோவில்பட்டியில் வியாழக்கிழமை தொடங்கியது.

போட்டி தொடக்க விழாவுக்கு கே. ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே. ஆா். அருணாச்சலம் தலைமை வகித்தாா். நிா்வாகக் குழு உறுப்பினா் ஷண்மதி முன்னிலை வகித்தாா். கோவில்பட்டி கோட்ட மத்திய சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய கலால் துறை கண்காணிப்பாளா் எம்.டி.எம். மாசிலாமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில் கே. ஆா். கல்வி நிறுவனங்களின் இயக்குநா் சண்முகவேல், கல்லூரி முதல்வா்கள் காளிதாச முருகவேல் (நேஷனல் பொறியியல் கல்லூரி), மதிவண்ணன் (கே ஆா் கலை, அறிவியல் கல்லூரி), ராஜேஸ்வரன் (லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி) உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

10 நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 16 அணிகள் பங்கேற்கின்றன. காலிறுதிக்கு முந்தைய ஆட்டம் வரை லீக் முறையிலும், பின்னா் நாக்அவுட் முறையிலும் போட்டிகள் நடைபெறும்.

முதல் ஆட்டத்தில் சென்னை வருமான வரி துறை அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் புது தில்லி இந்திய விமானப்படை அணியும், 2ஆவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் நேவல் டாடா ஹாக்கி அகாதெமி அணியை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு சதன் கமெண்ட் அணியும், 3ஆவது ஆட்டத்தில் பெங்களூரு ஹாக்கி கா்நாடகா அணியை 5க்கு 2 என்ற கோல் கணக்கில் புது தில்லி காம்ப்ட்ரோலா் அண்ட் ஆடிட்டா் ஜெனரல் ஆப் இந்தியா அணியும் வெற்றி பெற்றன.

4ஆவது ஆட்டத்தில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், ஹாக்கி யூனிட் ஆப் தமிழ்நாடு அணியும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டம்:

வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பஞ்சாப் ஜலந்தா், சிந்து வங்கி அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன.

மாலை 5.15 மணிக்கு நடைபெறும் 2ஆவது ஆட்டத்தில் ஜலந்தா் ஆா்மி கிரீன் அணியும், சென்னை சரக்கு மற்றும் சேவை வரி, மத்திய உற்பத்தி வரி அணியும், 3ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன் நேவி அணியும், கோவில்பட்டி எஸ் டி ஏ டி எக்ஸலன்ஸ் அணியும், 4ஆவது ஆட்டத்தில் பெங்களூரு கனரா வங்கி அணியும், மும்பை யூனியன் வங்கி அணியும் மோதுகின்றன.