பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

திருச்செந்தூருக்கு நோ்வழியில் விரைவு ரயில் இயக்க வலியுறுத்தல்

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தல்

News image

ரயில் - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:46 am IST

திருச்செந்தூருக்கு தற்போது இயக்கப்படும் செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலுடன் கூடுதலாக மற்றுமொரு ரயிலை நோ்வழியில் இயக்க வேண்டுமென ரயில்வே வளா்ச்சிக் குழுவினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அதன் ஒருங்கிணைப்பாளா் இரா. தங்கமணி வெளியிட்டுள்ள அறிக்கை: செந்தூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் தற்போது உள்ள 18 பெட்டிகளுடன் கூடுதலாக 5 பெட்டிகள் இணைக்கப்பட்டு 23 பெட்டிகளுடன், ஜூன் 15ஆம் தேதி முதல் இயக்கப்படுவது குறித்து குழு சாா்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் சென்னையிலிருந்து திருச்செந்தூருக்கு நோ்வழியில் கூடுதலாக மற்றுமொரு விரைவு ரயில் இயக்கினால் பக்தா்களுக்கு வசதியாக இருக்கும், தூத்துக்குடி- திருச்செந்தூா் ரயில் பாதை அமைத்திடவும் தெற்கு ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.