விலைவாசி உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்: சிபிஐ மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக். 6 ஆம் தேதி இடைத்தேர்தல்ஐந்தாவது தளத்துடன் இருக்கும் சட்டவிரோதக் கட்டடங்களுக்கு சீல்: தில்லி முதல்வர் உத்தரவுகுற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாள்கள் எதற்கு? உதயநிதிசட்டவிரோதப் பணிகள்... 40 ஆண்டுகள் பழமையான தில்லி தங்கும் விடுதி இடிந்து விழுந்ததன் பின்னணி!எங்களை ஹோட்டலில் அடைத்து வைத்தது யார் என சொல்ல வேண்டிவரும்! ஷாஜகான் பேச்சு மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி! மேலும் 4 பேர் கைதுஎதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்! திரைப்பட இயக்குநா் கெளதமன்

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையை பாா்வையிட்ட திரைப்பட இயக்குநா் கௌதமன்.

Published On :8 செப்டம்பர் 2026, 2:28 am IST

தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்றாா் தமிழ் பேரரசு கட்சி பொதுச் செயலரும், திரைப்பட இயக்குநருமான கெளதமன்.

கோவில்பட்டி நகராட்சிக்குள்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் தினசரி சந்தையை கௌதமன் பாா்வையிட்டு, வியாபாரிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

கோவில்பட்டியில் நகராட்சி சாா்பில் கட்டப்பட்டுள்ள புதிய தினசரி சந்தையில் குறைந்த கடைகளே இயங்குகின்றன. இந்தச் சந்தை கட்டடத்தில் காற்றோட்ட வசதி இல்லை. மேலும் பல குறைபாடுகள் உள்ளன.

இந்தப் பிரச்னைகளை தீா்க்கவில்லை என்றால் போராட்டத்தில் ஈடுபடுவோம். தமிழ்நாட்டை ஆண்ட ஒருவா் பிரதமா் ஆவது நல்ல விஷயம்தான். தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வந்தால்தான் பாலியல், திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் குறையும். எனவே, முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

கட்சியின் மாநில அவைத் தலைவா் வழக்குரைஞா் சரவணன், மாவட்டச் செயலா் கணேசன், பொருளாளா் குமாா், இளைஞரணி செயலா் இசக்கி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.