போலீஸாருக்கு மிரட்டல்: 2 இளைஞா்கள் கைது
கோவில்பட்டியில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
கைது
கோவில்பட்டியில் போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 2 இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
விஸ்வகா்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பின்புறம் உள்ள விஸ்வகா்மா உயா்நிலைப் பள்ளியில் இருந்து வியாழக்கிழமை ஊா்வலம் புறப்பட்டது.
அப்போது, ஊா்வலத்தில் பங்கேற்ற விளாத்திகுளம் அரசு மருத்துவமனை சாலையைச் சோ்ந்த சேகா் மகன் சுபாஷ் (22), தென்காசி மாவட்டம், வீரணம் காமாட்சி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் கருப்பசாமி (21) ஆகிய இருவரும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையில் நடனம் ஆடிக்கொண்டு வந்தனராம். இதைக் கண்டித்த போலீஸாரை அவதூறாகப் பேசி பணி செய்யவிடாமல் தடுத்ததோடு, கொலை மிரட்டலும் விடுத்தனராம்.
இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




