ஒட்டுக் கட்டடத்தில், காவல் ஆய்வாளர் அறை, குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அறை, உதவி ஆய்வாளர் அறை, பதிவேடுகள், ஆயுதங்கள் வைப்பறை, காவலர் ஓய்வு அறை ஆகிய அனைத்து வசதிகளுடன் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழைமை வாய்ந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்தது திருத்துறைப்பூண்டி காவல் நிலையம். ஆனால், சிறிய அளவில் இருந்த பழுதுகள் சீர் செய்யப்படாததால், கடந்த ஐந்து ஆண்டுகளாக மன்னார்குடி சாலையில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாத தனியார் கட்டடத்துக்கு மாற்றப்பட்டது. இதற்கு மாத வாடகையாக அரசு சார்பில் ரூ. 13 ஆயிரத்து 612 வழங்கப்படுகிறது.