இந்தக் கிராம மக்களுக்கு அருகில் உள்ளது திருவாரூர். ஆனால், நீடாமங்கலம் வட்டத்துடன் இந்தக் கிராமங்கள் இணைக்கப்பட்டுள்ளதால், இந்தக் கிராமங்களில் இருந்து திருநெல்லிக்காவல் வந்து ரயில் மூலமாகவோ அல்லது நாள் ஒன்றுக்கு சில முறை வரும் அரசுப் பேருந்து மூலமாகவோ திருவாரூர் செல்ல வேண்டும். பின்னர், அங்கிருந்து நீடாமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் சென்று சான்றிதழ்கள், முதியோர், விதவை ஆதரவற்றோர் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கும் நாள் முழுவதும் செலவிட்டு, பொருள் செலவும் செய்ய வேண்டிய நிலைமையில் உள்ளனர் மேற்குறிப்பிட்ட 5 கிராம மக்கள்.