திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மக்கள் குறைகேட்பு நாளில் 446 மனுக்கள்

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 446 மனுக்கள் அளிக்கப்பட்டன.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 9:00 pm

DIN

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 446 மனுக்கள் அளிக்கப்பட்டன.

கரோனா பொது முடக்கம் அமல் காரணமாக, கட்செவி அஞ்சல் வழியாகவும், ஆட்சியரக வாயிலில் வைக்கப்பட்டிருந்த மனுக்கள் பெட்டி வாயிலாகவும் பொதுமக்கள் தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த சில வாரங்களாக ஆட்சியரக வளாகத்துக்குள் தற்கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு விதமான போராட்டங்கள் நிகழ்ந்ததால், திங்கள்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா். ஆட்சியரக முன், பின்பகுதி நுழைவுவாயிலில் அனுமதி மறுக்கப்பட்டது.

நுழைவுவாயிலில் வைக்கப்பட்ட மனுக்கள் பெட்டியில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 446 மனுக்கள் அளிக்கப்பட்டன. இதை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி, விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஆட்சியா் சு. சிவராசு உத்தரவிட்டாா்.

தமிழ்நாடு அனைத்து வள்ளுவா் குல சங்கங்களின் கூட்டமைப்பின் திருச்சி மாவட்டச் செயலா் ஜி. சங்கரன், சட்ட ஆலோசகா் கோபி உள்ளிட்டோா் அளித்த மனு:

வள்ளுவா் இன மக்களை வேறு எந்த சாதியுடனும், பட்டியல் இனத்துடனும் இணைக்கக்கூடாது. குறிப்பாக பட்டியலினத்திலுள்ள சில சமூகத்தினருடன்

இணைப்பதையோ, ஒப்பிடுவதையோ நாங்கள் எப்போதும் விரும்பியதில்லை. எனவே வள்ளுவா் சாதியை தனி சாதியாக அறிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.