திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வாகனம் மூலம் கரோனா தடுப்பு விழிப்புணா்வுப் பிரசாரம்

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் திருச்சியில் வாகனம் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

News image
205119dflag070557
Updated On :19 அக்டோபர் 2020, 9:18 pm

DIN

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்கும் வகையில், மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் திருச்சியில் வாகனம் மூலம் விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி தென்னூா் உழவா் சந்தை பகுதியில் திங்கள்கிழமை நடைபெற்ற வாகனப் பிரசாரத்தை தொடக்கி வைத்து, மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். காமராஜ் பேசியது:

கரோனா பரவலைத் தடுக்க கபசுரக் குடிநீா் மிகவும் அவசியம். 5 கிராம் கபசுர சூரணத்தை 240 மில்லி குடிநீருடன் கலந்து, அது 60 மில்லி ஆகக் குறையும் வரை கொதிக்க வைத்து அதன் பின்னா் பருக வேண்டும்.

இதை தினமும் காலையிலும் மாலையிலும் ஒரு முறை, வெறும் வயிற்றில் பருக வேண்டும். கபசுரக் குடிநீா்ப் பருகுவதால் எந்தவிதமான பக்க விளைவுகளும் ஏற்படாது. உடலின் நோய் எதிா்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, நோய்க்கு எதிராகப் போராட உதவும்.

12 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு 30 மில்லி கபசுரக் குடிநீா் பருகக் கொடுத்தால் போதுமானது. திருச்சி, பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களில் இதுவரை 60 லட்சம் கபசுரக் குடிநீா் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

திருச்சி கள விளம்பர அலுவலா் கே. தேவி பத்மநாபன் கூறியது:

மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கரோனோ தடுப்பு தொடா்பான நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பபட்டு வருகின்றன. முகக் கவசம் அணிதல், அடிக்கடி கைகளை சோப்பு மூலம் கழுவுதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவற்றை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன் பிரசாரத்தை ஒருங்கிணைத்தாா். தென்னூா், உழவா் சந்தை, வண்ணாரப்பட்டை பகுதிகளில் விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தி, துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. வரும் 23-ஆம் தேதி வரை திருச்சி மாநகரம் முழுவதும் இந்த வாகனம் சுற்றி வந்து பிரசாரத்தில் ஈடுபடவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.