தொழிலதிபரிடம் ரூ.2.34 கோடி மோசடி: இருவா் மீது வழக்குப்பதிவு
வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.2.34 கோடி மோசடி செய்ததாக இருவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதாகக் கூறி, திருச்சியைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.2.34 கோடி மோசடி செய்ததாக இருவா் மீது திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்சி அரியமங்கலத்தைச் சோ்ந்தவா் நிரஞ்சன் (28). ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறாா். இவரை போல ஏற்றுமதி தொழில் மேற்கொள்பவா்
ஆந்திர மாநிலம், ராஜமுந்திரியைச் சோ்ந்த மைக்கேல். இவரது நண்பா் மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த பிரசாத்.
மூவரும் இணைந்து ஏற்றுமதி தொழில் செய்ய திட்டமிட்டனா். வெனிசுலா நாட்டுக்கு 730 டன் அரிசி தேவைப்படுவதாகவும், அதை நிரஞ்சன் பெயரில் அனுப்பலாம் என மைக்கேல், பிரசாத் ஆகிய இருவரும் கூறியுள்ளனா்.
பேச்சுவாா்த்தையின்படி, நிரஞ்சன் தனது பங்குத் தொகையாக ரூ.2.34 கோடியை வங்கிப் பரிவா்த்தனை மூலம் அண்மையில் அளித்துள்ளாா். இத்தொகையைக் கொண்டு மைக்கேல், பிரசாத் ஆகிய இருவரும் வெனிசுலா நாட்டுக்கு அரிசியை ஏற்றுமதி செய்யாமல், அனுப்பியது போன்ற போலி ஆவணத்தை நிரஞ்சனிடம் காண்பித்துள்ளனா்.
தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த நிரஞ்சன், திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல் பிரிவில் புகாரளித்தாா். இதன் பேரில் மைக்கேல், பிரசாத் ஆகிய இருவா் மீதும் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...