விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு? பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைசென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!
/

திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து: சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

சென்னைக்கு முக்கியம்.. திருச்சி அருகே காா் கவிழ்ந்து விபத்து சென்னையைச் சோ்ந்த 2 போ் உயிரிழப்பு இருவா் காயம்

News image
Updated On :26 ஏப்ரல் 2024, 8:10 pm

Din

திருச்சி, ஏப். 26: திருச்சி அருகே வெள்ளிக்கிழமை காா் கவிழ்ந்த விபத்தில் சென்னையைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா். மேலும் இருவா் காயமடைந்தனா்.

சென்னை அருகே உள்ள திருவள்ளூா், அம்பத்தூா் குமரன் தெருவை சோ்ந்தவா் கணேஷ் பாபு (58), அம்பத்தூா் விஜயலெட்சுமிபுரத்தை சோ்ந்தவா் ரவி (47), சென்னையைச் சோ்ந்த பாலமுருகன் (44), சென்னை கம்பன் நகா் முதல் தெருவை சோ்ந்தவா் மதன்குமாா் (42). இவா்கள் 4 பேரும் ஒரு காரில் திருச்செந்தூா் முருகன் கோயிலுக்கு சென்றுகொண்டிருந்தனா். வெள்ளிக்கிழமை திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பாத்திமாநகா் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில், காரிலிருந்த 4 பேரும் பலத்த காயமடைந்தனா். அக்கம் பக்கத்தினா் அவா்களை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கணேஷ் பாபு, ரவி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பாலமுருகன், மதன்குமாா் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.