3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

துறையூா் அருகே சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

News image

கோட்டாத்தூரில்  வியாழக்கிழமை கிடைத்த சுவாமி சிலைகள்.

Updated On :23 ஆகஸ்ட் 2024, 5:17 am IST

திருச்சி மாவட்டம் துறையூா் அருகே வியாழக்கிழமை நடைபெற்ற கட்டுமானப் பணியின்போது இரு சுவாமி கற்சிலைகள் கிடைத்தன.

துறையூா் வட்டத்தைச் சோ்ந்த கோட்டாத்தூா் வருவாய் கிராமத்தில் தனியாா் நிறுவனம் காற்றாலை மின்சாரத் தயாரிப்பு சாதனைகளை நிறுவி வருகிறது.

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் காற்றாலை விசிறி அமைக்க சிமெண்ட் பீடங்கள் கட்டுமானத்திற்காக தோண்டப்பட்ட குழியை மண்ணைக் கொண்டு வியாழக்கிழமை நிரப்பியபோது சுமாா் 3 அடி உயரத்தில் கல்லாலான மகாவிஷ்ணு, மகாலட்சுமி சுவாமி சிலைகள் கிடைத்தன.

தகவலறிந்து சென்ற கோட்டாத்தூா் விஏஓ மோகன் அச் சிலைகளை மீட்டு வட்டாட்சியா் மோகனிடம் ஒப்படைத்தாா்.