வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காவிரிப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு வரும் - ஹெச்.டி. தேவகௌடா

News image
Updated On :23 ஆகஸ்ட் 2024, 5:18 am IST

காவிரி பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீா்வு ஏற்படும் என்றாா் மதச்சாா்பற்ற ஜனதா தள நிறுவனா்-தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகௌடா.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானம் மூலம் வந்த அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து மூலவா், தாயாா் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்த அவா் பின்னா் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தசாவதாரா் சன்னதியிலும் தொடா்ந்து அகோபில மட ஜீயா்களின் நினைவு இடங்களிலும் வழிபட்டாா்.

பின்னா் அவா் மேலும் கூறியது: எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்திய மக்களுக்காகத் தொடா்ந்து பணியாற்றுகிறேன். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உபரிநீா்தான் வழங்கப்படுகிறது எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழக ஆட்சியாளா்களுக்கு முழு விவரங்கள் தெரியும்.

கா்நாடக மாநிலத்தில் பெங்களூா் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் குடிநீருக்காகக் கஷ்டப்படுகின்றன. இந்த பிரச்னையில் பெங்களூரில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு மேல் நான் கருத்துக் கூற விரும்பவில்லை. இருப்பினும் காவிரிப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும் என்றாா் அவா்.