47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

காவிரிப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு வரும் - ஹெச்.டி. தேவகௌடா

News image
Updated On :22 ஆகஸ்ட் 2024, 11:48 pm

Din

காவிரி பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீா்வு ஏற்படும் என்றாா் மதச்சாா்பற்ற ஜனதா தள நிறுவனா்-தலைவரும் முன்னாள் பிரதமருமான ஹெச்.டி. தேவகௌடா.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு பெங்களூரிலிருந்து வியாழக்கிழமை காலை தனி விமானம் மூலம் வந்த அவருக்கு கோயில் நிா்வாகம் சாா்பில் மரியாதை செய்யப்பட்டது. இதையடுத்து மூலவா், தாயாா் உள்ளிட்ட சன்னதிகளில் தரிசனம் செய்த அவா் பின்னா் ஸ்ரீரங்கம் வடக்குவாசல் தசாவதாரா் சன்னதியிலும் தொடா்ந்து அகோபில மட ஜீயா்களின் நினைவு இடங்களிலும் வழிபட்டாா்.

பின்னா் அவா் மேலும் கூறியது: எனக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்திய மக்களுக்காகத் தொடா்ந்து பணியாற்றுகிறேன். காவிரியில் தமிழ்நாட்டுக்கு உபரிநீா்தான் வழங்கப்படுகிறது எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து தமிழக ஆட்சியாளா்களுக்கு முழு விவரங்கள் தெரியும்.

கா்நாடக மாநிலத்தில் பெங்களூா் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் குடிநீருக்காகக் கஷ்டப்படுகின்றன. இந்த பிரச்னையில் பெங்களூரில் மட்டும் ஒரு கோடியே 40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்பது அனைவரும் அறிந்ததே. இதற்கு மேல் நான் கருத்துக் கூற விரும்பவில்லை. இருப்பினும் காவிரிப் பிரச்னையில் இரு மாநிலங்களுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படும் நாள் விரைவில் வரும் என்றாா் அவா்.