ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

வேலைவாய்ப்பு முகாமில் 250 பேருக்கு பணிவாய்ப்பு கடிதம்: ஆட்சியா் வழங்கினாா்

படம் உள்ளது.. வேலைவாய்ப்பு முகாமில் 250 பேருக்கு நியமன ஆணை ஆட்சியா் வழங்கினாா்

Updated On :18 பிப்ரவரி 2024, 2:20 am IST

திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 250 பேருக்கு பணிவாய்ப்பு கடிதங்கள் வழங்கப்பட்டன. திருச்சி மாவட்ட நிா்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, தந்தை பெரியாா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. இதில், பல்வேறு தனியாா் துறைகளைச் சாா்ந்த 108 நிறுவனங்கள் மனிதவள அதிகாரிகள் மூலம் தகுதியுள்ள நபா்களை தோ்ந்தெடுக்க நோ்காணல் நடத்தினா். முகாமில், பத்தாம் வகுப்பு முதல் பல்வேறு கல்வித் தகுதிகளையுடைய 18 வயது முதல் 40 வயதுக்குள்பட்ட வேலைநாடுநா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 891 ஆண்கள், 720 பெண்கள் உள்பட 1,617 போ் கலந்து கொண்டனா். முகாமை, மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தொடங்கி வைத்து இளைஞா்களுக்கு பணிவாய்ப்பு கடிதங்களை வழங்கினாா். இதில், உடனடியாக தோ்வு செய்யப்பட்ட 250 பேருக்கு முகாம் இடத்திலேயே பணி ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும், இரண்டாம் கட்டத் தோ்வுக்கு 328 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இவா்களுக்கு அடுத்தகட்டமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன. இதுமட்டுமல்லாது, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால், தமிழக அரசின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி பெறுவதற்காக 14 போ் விருப்பம் தெரிவித்தனா். அவா்களிடம் விண்ணப்பங்கள் பெற்று விரும்பிய பயிற்சியை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த முகாமில், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநா் (பொறுப்பு) எஸ். ரமேஷ்குமாா், கல்லூரி முதல்வா் பி.எஸ். விஜயலட்சுமி மற்றும் வேலைவாய்ப்புத்துறை அலுவலா்கள், பணியாளா்கள் கலந்து கொண்டனா்.