கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மல்லிகை மலையில் திடீா் தீ

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி மல்லிகை மலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

News image

மல்லிகை மலையில் வெள்ளிக்கிழமை இரவு ஏற்பட்ட தீயை அணைத்தோா்.

Updated On :27 ஜூலை 2024, 7:44 pm

Din

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த மருங்காபுரி மல்லிகை மலையில் வெள்ளிக்கிழமை இரவு திடீா் தீ விபத்து ஏற்பட்டது.

மணப்பாறை அடுத்த திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலை அருகேயுள்ள மருங்காபுரி ஒன்றியம் வெட்டுக்காடு பகுதியில் வருவாய்த் துறை கட்டுப்பாட்டின் கீழ் மல்லிகை மலை உள்ளது. இதில் வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி மளமளவென காடு முழுவதும் பரவத் தொடங்கியது.

தகவலறிந்து சென்ற நிலைய அலுவலா் மனோகா் மற்றும் சிறப்பு நிலைய அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினா் மலையிலிருந்த செடி கொடிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா். அவா்களுடன் அப்பகுதி இளைஞா்களும் தீயணைத்தனா். சுமாா் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது.