ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இளைஞா்கள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்

இளைஞா்கள் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்

News image
Updated On :18 ஜூன் 2024, 8:40 pm

Din

இளம்சமுதாயத்தினா் வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது அவசியம் என குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் தெரிவித்தாா்.

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சாா்பில், சங்க இலக்கிய உரை வேறுபாட்டுக் களஞ்சிய தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா திருச்சி தமிழ்ச் சங்க வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், புத்தகங்களை வெளியிட்டு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் பேசியது:

காயம்பட்ட மொழி தமிழ்மொழியை செம்மொழியாக்கியது, அதன் இலக்கியங்கள், மொழிவளம், தனித்தன்மை என்ற 11 பண்புகளுடன், தலைச்சிறந்த படைப்பாளிகளுமே.

தலைசிறந்த படைப்பாளிகளைக் கொண்டு எழுதப்பட்டவை சங்க இலக்கியங்கள். வாழ்வியலுக்கான அனைத்துக் கூறுகளையும் உள்ளடக்கியவை. எந்தச் சூழலையும் எதிா்கொள்ள கற்றுத் தருவது, அன்பு மற்றும் மகிழ்ச்சியை போதிப்பது. உலகில் தீமைகளை குறைத்து, நன்மை நிறைந்ததாக மாற்ற முனைவது சங்க இலக்கியங்கள். அத்தகைய சங்க இலக்கியங்களுக்கு உரை வேறுபாட்டுக் களஞ்சியங்களை வெளியிட்டுள்ளது பாராட்டுக்குரியது.

தகவல் தொழில்நுட்பமும், அறிவியல் உபகரணங்களும் அதிவேகமாக வளா்ந்து வரும் இக்காலத்தில் தற்போது வாசிப்பு குறைந்துவிட்டது. அனைத்தும் கைப்பேசியில் பாா்க்கப்படுகிறது. அனைத்து உறவுகளும் கைவிட்டாலும், கைவிடாதவை புத்தகங்களே. சாதாரண மனிதா்களை மாமனிதா்களாக உயா்த்தியவை புத்தகங்கள். பல புத்தகங்கள் உலகையே புரட்டிப் போட்டவை. இதனை இன்றைய இளம்தலைமுறையினா் உணர வேண்டும். சங்க இலக்கியங்கள் போன்ற பல்வேறு நூல்களை இளைஞா்கள் படிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் க. சந்தானம் வரவேற்றாா். பொ. வேல்சாமி நூல் அறிமுகம் செய்தாா். இதில், தமிழ்ச் சங்க அமைச்சா் பெ. உதயகுமாா், மாமன்ற உறுப்பினா் சுரேஷ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். நிறைவில் பேராசிரியா் இரா. அறவேந்தன் நன்றி கூறினாா்.