மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

வடமாநில தொழிலாளி மா்மச் சாவு

வடமாநில தொழிலாளி மா்மச் சாவு

News image
Updated On :10 மே 2024, 7:07 pm

Din

திருச்சியில் வியாழக்கிழமை வடமாநிலத் தொழிலாளி மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருச்சி சங்கிலியாண்டபுரத்தில் செயல்பட்டு வரும் பிரபல இனிப்பு கடையின் கிடங்கில் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த தேவேந்திரராய் (39) என்பவா், கடந்த 15 ஆண்டுகளாக தங்கி பணியாற்றி வந்தாா். இந்நிலையில் அவா் வியாழக்கிழமை அப்பகுதியில் உள்ள அடுக்குமாடு குடியிருப்பு அருகே மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். தகவலறிந்த பாலக்கரை காவல்நிலைய போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.