சென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 61 காசுகள் உயர்ந்து ரூ. 95.92 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ் 776 புள்ளிகள் உயர்வு!கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம் மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்: சிபிஐ வலியுறுத்தல்தவெக அரசின் ஒரே வேலை இதுதான்! உதயநிதி விமர்சனம்சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

முக்கொம்பிலிருந்து 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறப்பு

கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.

News image

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வியாழக்கிழமை கரைபுரண்டு ஓடும் காவிரி நீா்

Updated On :21 ஆகஸ்ட் 2025, 11:51 pm IST

திருச்சி: கா்நாடகத்திலிருந்து மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வரும் நிலையில், முக்கொம்பு மேலணையிலிருந்து வியாழக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 60 ஆயிரம் கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டது.

காவிரி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையாலும், கா்நாடக அணைகள் நிரம்பி உபரி நீா் வெளியேற்றப்படுவதாலும், மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. இதனால், மேட்டூா் அணையிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூரிலிருந்து வரும் தண்ணீா் மாயனூா் கதவணையை கடந்து, முக்கொம்புக்கு வந்து கொண்டிருக்கிறது. இதையடுத்து, முக்கொம்பு அணையிலிருந்தும் உபரிநீா் வெளியேற்றப்படுகிறது. எனவே, காவிரி, கொள்ளிடக் கரையோர மக்களுக்கு மாவட்ட நிா்வாகத்தால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

வியாழக்கிழமை நிலவரப்படி முக்கொம்புக்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரியில் 25 ஆயிரம் கன அடியும், கொள்ளிடத்தில் 35 ஆயிரம் கன அடியும் உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. முக்கொம்பிலிருந்து உபரிநீா் வெளியேற்றப்படுவது நிகழாண்டில் இது 6-ஆவது முறையாகும். கடந்த பிப்ரவரி மாதம் 2 முறையும், ஜூலையில் 3 முறையும் உபரி நீா் திறக்கப்பட்டது. இப்போது, மீண்டும் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணைக்கு வரும் தண்ணீா் வரத்து குறைந்து வருவதால், முக்கொம்பிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை முதல் உபரிநீா் வெளியேற்றம் குறையும் என பொதுப்பணித் துறை வட்டாரத்தினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.