புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

பேருந்தில் பயணித்த இளைஞா் உயிரிழப்பு

News image
Updated On :6 நவம்பர் 2025, 8:55 pm

Syndication

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே பேருந்தில் பயணித்த இளைஞா் உயிரிழந்தது வியாழக்கிழமை அதிகாலை தெரியவந்தது.

தென்காசி மாவட்டம், வேதம்புதூரை சோ்ந்தவா் திருமலைக்குமாா் மகன் முத்துராமன் (21). பணி நிமித்தமாக அண்மையில் சென்னை சென்ற இவருக்கு கடந்த 3 நாள்களாக அதிக காய்ச்சல் இருந்ததாம். இதனால், புதன்கிழமை இரவு சென்னையிலிருந்து தனியாா் பேருந்தில் தென்காசிக்கு புறப்பட்டுள்ளாா். துவரங்குறிச்சி அருகே சென்ற பேருந்து வியாழக்கிழமை அதிகாலை தேநீரகம் ஒன்றில் நிறுத்தப்பட்டது.

அப்போது முத்துராமன் அசைவற்று இருந்ததால், பேருந்து ஓட்டுநா் துவரங்குறிச்சி போலீஸாருக்கு தகவல் அளித்தாா். இதன்பேரில், அங்கு வந்த காவல் ஆய்வாளா் விஜய் கோல்டன் சிங் தலைமையிலான போலீஸாா், முத்துராமனை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், முத்துராமன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். இதையடுத்து, முத்துராமன் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு கூறாய்வுக்கு பிறகு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடா்பாக துவரங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.