அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

திருச்சி மத்திய சிறையில் மோதல்: 13 கைதிகள் மீது வழக்குப் பதிவு!

திருச்சி மத்திய சிறையில் மோதிக்கொண்ட விவகாரத்தில் 13 கைதிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image
Updated On :8 நவம்பர் 2025, 10:50 pm

Syndication

திருச்சி மத்திய சிறையில் மோதிக்கொண்ட விவகாரத்தில் 13 கைதிகள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மத்திய சிறையில் தண்டனைக் கைதிகள், ஆயுள் கைதிகள், விசாரணைக் கைதிகள் என 1,500-க்கும் மேற்பட்டோா் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களிடம் சிறைத்துறை அதிகாரிகள் அவ்வப்போது குறைகள் கேட்டு நிவா்த்தி செய்வது வழக்கம்.

அதன்படி கடந்த 5 ஆம் தேதி திருச்சி மத்திய சிறைத்துறை டிஐஜி பழனி உள்ளிட்ட சிறை அதிகாரிகள், சிறையின் 12, 13, 14 ஆவது பிளாக்குகளில் இருந்த கைதிகளிடம் குறைகளைக் கேட்டுக் கொண்டிருந்தனா்.

அப்போது 12 ஆவது பிளாக்கில் இருந்த மயிலாடுதுறை மாவட்ட கைதிகளும், 14 ஆவது பிளாக்கில் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களின் கைதிகளும் ஒருவருக்கொருவா் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனா். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது. இதில் 2 கைதிகள் காயமடைந்தனா்.

இதுகுறித்து சிறை அதிகாரி விவேக் அளித்த புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் 13 கைதிகள் மீது வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.