பேருந்தில் ஏறிய உதவி பேராசிரியரிடம் மடிக்கணினி பறிப்பு: இளைஞா் கைது
திருச்சியில் பேருந்தில் ஏறியபோது மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரிடம் மடிக்கணினியை பறித்துச்சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவா் செ.ராஜா (39). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருச்சியில் இருந்து தஞ்சாவூா் செல்லும் பேருந்தில் பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் ஏறியுள்ளாா். அப்போது, இளைஞா் ஒருவா் அவரது மடிக்கணியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.
இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், மடிக்கணினியை பறித்துச் சென்றது அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மா.சதீஷ்குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை பறிமுதல் செய்தனா்.
