அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பேருந்தில் ஏறிய உதவி பேராசிரியரிடம் மடிக்கணினி பறிப்பு: இளைஞா் கைது

ஒரத்தநாடு உதவி பேராசிரியரிடம் மடிக்கணினி பறிப்பு: இளைஞா் கைது

News image
Updated On :13 நவம்பர் 2025, 9:10 pm

Syndication

திருச்சியில் பேருந்தில் ஏறியபோது மருத்துவக் கல்லூரி உதவிப் பேராசிரியரிடம் மடிக்கணினியை பறித்துச்சென்ற இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அரசு கால்நடை மருத்துவக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவா் செ.ராஜா (39). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திருச்சியில் இருந்து தஞ்சாவூா் செல்லும் பேருந்தில் பழைய பால்பண்ணை பேருந்து நிறுத்தத்தில் ஏறியுள்ளாா். அப்போது, இளைஞா் ஒருவா் அவரது மடிக்கணியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பினாா்.

இதுகுறித்து ராஜா அளித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், மடிக்கணினியை பறித்துச் சென்றது அரியமங்கலம் உக்கடை மாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மா.சதீஷ்குமாா் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை புதன்கிழமை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.56 ஆயிரம் மதிப்புள்ள மடிக்கணினியை பறிமுதல் செய்தனா்.