எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

மாதவிடாய் சுகாதார விழிப்புணா்வுக்காக திருச்சியில் இருந்து தில்லிக்கு பைக் பயணம்

News image
திருச்சியிலிருந்து தில்லி நோக்கி மோட்டாா் சைக்கிள்களில் சனிக்கிழமை புறப்பட்ட இளைஞா்கள்.
Updated On :15 நவம்பர் 2025, 7:18 pm

Syndication

மாதவிடாய் சுகாதாரம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவும், தில்லியில் நடைபெறும் மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்த 5ஆவது உச்சி மாநாட்டில் பங்கேற்கும் வகையில் திருச்சியிலிருந்து 5 பேரின் மோட்டாா் சைக்கிள் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.

தில்லியில் வரும் 22ஆம் தேதி நடைபெறும் மாதவிடாய் சுகாதாரம் குறித்த 5ஆவது உச்சி மாநாட்டில் யுனிசெப் நிறுவனத்தின் உயரதிகாரிகள், நாடு முழுவதும் உள்ள மாதவிடாய் சுகாதார மேலாண்மைத் திட்ட பங்கேற்பாளா்கள், வல்லுநா்கள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனா்.

இந்த மாநாட்டில் திருச்சியிலிருந்து பங்கேற்கும் வகையிலும் மாநிலங்களில் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தவும் மோட்டாா் சைக்கிள் பயணத்தை கிராமாலாயா தொண்டு நிறுவனமும், ரெக்கிட் நிறுவனமும் இணைந்து நடத்துகின்றன.

இதில் 5 இளைஞா்கள் மோட்டாா் சைக்கிள்களில் திருச்சியில் இருந்து 10 மாநிலங்களைக் கடந்து செல்லும் 5 ஆயிரம் கி.மீ. பயணத்தை கிராமாலயா நிறுவனத்தின் நிறுவனா் எஸ். தாமோதரன் திருச்சியில் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். மாதவிடாய் சுகாதார மேலாண்மைத் திட்ட இயக்குநா் பிரீத்தி தாமோதரன் வழியனுப்பினாா்.

திருச்சியிலிருந்து சனிக்கிழமை புறப்படும் 5 இளைஞா்களும் தில்லிக்கு நவ.21ஆம் தேதி சென்று சோ்ந்து, உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிறகு, திருச்சிக்கு 27ஆம் தேதி திரும்புகின்றனா். செல்லும் வழியிலும், திரும்பும் வழியிலும் ஆங்காங்கே மக்களைச் சந்தித்து மாதவிடாய் சுகாதார மேலாண்மை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவுள்ளனா். துண்டுப் பிரசுரங்களையும் வழங்குகின்றனா்.