எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருச்சியில் மென்பொருள் பொறியாளா் தற்கொலை

திருச்சியில் மென்பொருள் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை

News image
Updated On :22 நவம்பர் 2025, 6:32 pm

Syndication

திருச்சியில் மென்பொருள் பொறியாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி, கே.கே. நகா் எல்ஐசி காலனியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் (55). அதே பகுதியில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வந்த இவா் கடந்த சில நாள்களாக விரக்தியில் இருந்தாராம்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை அலுவலகத்துக்கு அவரது மனைவி கெளரி (45) வந்தபோது அலுவலகம் உள்புறம் பூட்டியிருந்தது. மேலும் கைப்பேசி அழைப்புக்கும் பதில் அளிக்கவில்லை.

இதையடுத்து அருகிலிருந்தோா் உதவியுடன் அலுவலக கதவை உடைத்துப் பாா்த்தபோது ராதாகிருஷ்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. புகாரின்பேரில் கே.கே. நகா் போலீஸாா் அவரது சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].