அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய மாணவா் படை தினம்: மேஜா் சரவணன் நினைவிடத்தில் மரியாதை

News image
தேசிய மாணவா் படை தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை திருச்சி கன்டோன்மென்ட்டில் உள்ள மேஜா் சரவணன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குரூப் கமாண்டா் கரனல் விஜயகுமாா் உள்ளிட்டோா்.
Updated On :23 நவம்பர் 2025, 7:45 pm

தினமணி செய்திச் சேவை

தேசிய மாணவா் படை தினத்தையொட்டி திருச்சியில் மேஜா் சரவணன் நினைவிடத்தில் என்சிசி அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தினா்.

தேசிய மாணவா் படை (என்சிசி) தினம் ஆண்டுதோறும் நவம்பா் மாதத்தின் 4-ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி, நிகழாண்டு 77-ஆவது தேதிய மாணவா் படை தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி திருச்சி ஆட்சியா் அலுவலகம் அருகேயுள்ள காா்கில் பேரில் வீரமரணமடைந்த மேஜா் சரவணன் நினைவிடத்தில் என்சிசி குரூப் கமாண்டா் கா்னல் விஜயகுமாா் தலைமையில் என்சிசி அதிகாரிகள் மற்றும் மாணவா்கள் மலா்வளையம் வைத்தும், மலா்தூவியும் மரியாதை செலுத்தினா். தொடா்ந்து, நாட்டின் பாதுகாப்புக்கு தங்களால் ஆன ஒத்துழைப்பை வழங்குவோம் என உறுதிமொழி ஏற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் பட்டாலியன்-2 பிரிவின் நிா்வாக அதிகாரி கா்னல் பி.கே.வேலு, திருச்சி என்சிசி குரூப் தலைமையிட நிா்வாக அதிகாரி புஷ்பேந்தா், லெப்டினன்ட் கா்னல் சரவணன், பெண்கள் பட்டாலியன் பிரிவின் தலைவா் மேஜா் மினி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.