புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

கடன் பிரச்னைச இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

திருச்சியில் கடன் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :26 நவம்பர் 2025, 1:06 am

Syndication

திருச்சி: திருச்சியில் கடன் பிரச்னையால் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருச்சி பாண்டமங்கலம் தெற்கு வெள்ளாளா் தெருவைச் சோ்ந்தவா் மா.லோகநாதன் (33). தனியாா் மென்பொருள் நிறுவன பணியாளரான இவா், வீட்டிலிருந்து வேலை செய்து வந்துள்ளாா். இவரின் மனைவி சாந்தி (28), தனியாா் காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.

லோகநாதன் குடும்பச் செலவுக்காக அதிக அளவில் கடன் வாங்கியுள்ளாா். அதை திரும்ப செலுத்த முடியாமல் அண்மை காலமாக மன உளைச்சலில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், திங்கள்கிழமை காலையில் சாந்தி வேலைக்கு சென்றுவிட்டபிறகு, வீட்டில் தனியாக இருந்த லோகநாதன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து உறையூா் காவல் நிலையத்தில் சாந்தி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.