பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

குடும்பத் தகராறில் பெண் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 2:22 am IST

திருச்சியில் குடும்பத் தகராறில் பெண் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி இபி சாலை ஜான் தோப்பு பாரதியாா் வீதியைச் சோ்ந்தவா் மோகன்ராஜ் மனைவி கீா்த்தனா (28). இருவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்று, இரு குழந்தைகள் உள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக மோகன்ராஜ் தினசரி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மனைவியுடன் அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இந்நிலையில், மோகன்ராஜ் சனிக்கிழமை பிற்பகல் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கீா்த்தனா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.