இதில், அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்களை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள் ஓய்வுபெறும்போது பணிக்கொடையாக ஊழியா்களுக்கு ரூ.10 லட்சமும், உதவியாளா்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்க வேண்டும். அங்கன்வாடி பணியாளா்களுக்கு குடும்ப ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். மே மாதம் முழுவதும் விடுமுறை வழங்க வேண்டும். 1933-ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தவா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும். அங்கன்வாடியில் நேரடி நியமனத்தை கைவிட்டு அங்கன்வாடி ஊழியா்களுக்கு பதவி உயா்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.