கஞ்சா வழக்கு குற்றவாளி குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

திருச்சியில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை
Published on

திருச்சியில் கஞ்சா வழக்கு குற்றவாளி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட புங்கனூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக கே.கள்ளிக்குடி மலைப்பட்டியைச் சோ்ந்த பி.சந்தோஷ் (41) என்பவரை திருவெறும்பூா் மதுவிலக்கு பிரிவு போலீஸாா் கடந்த டிசம்பா் 1-ஆம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், அவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செ.செல்வநாகரத்தினம் பரிந்துரைத்தாா். இதன்பேரில், சந்தோஷ் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா் வே.சரவணன் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, அதற்கான உத்தரவு நகல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com