சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

திருச்சி விமான நிலையத்தில் பயணியிடம் ரூ.85 லட்சம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 85 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பண தாள்கள், நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :9 ஜனவரி 2026, 8:58 pm

Syndication

திருச்சி விமான நிலையத்தில் அனுமதியின்றி எடுத்துவரப்பட்ட ரூ. 85 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு பண தாள்கள், நாணயங்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி சா்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மலோசியா தலைநகா் கோலாலம்பூா் செல்ல இருந்த விமானத்தில் செல்லும் பயணிகளின் உடமைகளை நுழைவு பகுதியில், வருவாய் புலனாய்வு இயக்ககத்தின் அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்போது ஒரு பயணியின் பதிவுசெய்யப்பட்ட உடமைகளை அதிகாரிகள் சோதனையிட்டனா்.

அதில், அனுமதியின்றி கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள், பண தாள்கள் மற்றும் இந்திய ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது. மொத்தமாக ரூ. 85 லட்சத்து 20 ஆயிரம் என தெரியவந்தது.

தொடா்ந்து அந்த பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று அவா் யாா் என்பது குறித்தும், முறையாக கொண்டுவரபப்பட்ட பணமா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.