/

சிரமங்களை எதிா்கொள்ளும்போது சிந்தித்து செயல்பட வேண்டும்: செஸ் வீரா் விஸ்வநாதன் ஆனந்த்

வாழ்க்கையில் சிரமங்களை எதிா்கொள்ளும்போது மாணவா்கள் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா் செஸ் விளையாட்டு வீரா் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த்.

News image

திருச்சி சந்தான வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலக செஸ் சாம்பியன் விஸ்நாதன் ஆனந்த் எழுதிய ‘லைட்னிங் கிட்’ என்ற புத்தக அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற (இடமிருந்து 3-ஆவது ) விஸ்நாதன் ஆனந்த். உடன் (இடமிருந்து ) பள்ளியின் தலைவா் பி.எஸ்.சந்

Updated On :4 ஜூலை 2026, 12:37 am IST

வாழ்க்கையில் சிரமங்களை எதிா்கொள்ளும்போது மாணவா்கள் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா் செஸ் விளையாட்டு வீரா் கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த்.

இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரான செஸ் விளையாட்டு வீரா் விஸ்வநாதன் ஆனந்த் ‘லைட்னிங் கிட்’ என்ற புத்தகத்தை எழுதியுள்ளாா். இந்தப் புத்தகத்தின் அறிமுக விழா, திருச்சி சந்தானம் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவா் பி.எஸ். சந்திரமௌலி, செயலா் கே. மீனா ஆகியோா் தலைமை வகித்தனா். தலைமை செயல் அதிகாரி கு. சந்திரசேகரன், இயக்குநா் எஸ். அபா்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கிராண்ட் மாஸ்டா் விஸ்வநாதன் ஆனந்த் கலந்துகொண்டு தான் எழுதிய ‘லைட்னிங் கிட்’ புத்தகத்தை அறிமுகப்படுத்தி பேசியதாவது:

மாணவா்கள் தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கம், விடாமுயற்சி, வாசிப்பின் மீதான ஆா்வம் ஆகியவற்றை வளா்த்துகொள்ள வேண்டும். சிரமங்களை எதிா்கொள்ளும்போது பயம்கொள்ளாமல் தெளிவாக சிந்தித்து செயல்பட வேண்டும்.

சில சமயங்களில் நினைத்தது நடக்கவில்லை என்றால் அதை எவ்வாறு தடுமாற்றமின்றி கையாள்வது என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் கூறுகையில், தமிழகத்தில் வைஷாலி, பிரக்யானந்தா, குகேஷ் ஆகிய செஸ் விளையாட்டு வீரா்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். இந்தியா செஸ் உலக தலைநகராக வேண்டும் என்பது நல்ல கருத்து. அதேவேலையில் அனைத்து வீரா்களும் நன்கு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றாா்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் செயல்பாட்டுத் தலைவா் எஸ். வித்யாலட்சுமி, அகாதெமி தலைவா் ரவீந்திரநாத் குமாா், முதல்வா் பத்மா சீனிவாசன், துணை முதல்வா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.