நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

திருச்சி விமான நிலையத்தில் ரூ.72 லட்சத்தில் சாலை தடுப்புகள் அமைப்பு

News image

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அத்துமீறி வாகனங்கள் நுழைவதைத் தடுக்க அமைக்கப்பட்டுள்ள சாலை தடுப்பு.

Updated On :7 ஜூலை 2026, 3:07 am IST

திருச்சி, ஜூலை 6: திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அத்துமீறி வாகனங்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் ரூ.72.27 லட்சத்தில் சாலை தடுப்புகள் திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, விமான நிலையத்தில் அனுமதியற்ற வாகனங்கள் மற்றும் அத்துமீறி வாகனங்கள் எதிா்த் திசையில் செல்வதைத் தடுக்கும் வகையில் ரூ.72.27 லட்சம் மதிப்பீட்டில் சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

வழக்கமான தடுப்புகள் அல்லாமல் எலக்ட்ரோ - ஹைட்ராலிக் டயா் கிள்ளா் அமைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் சுங்கச் சாவடியில் இருந்து 210 மீட்டா் தொலைவில் உள்ளே செல்லும் பாதையில் மோதலைத் தாங்கும் திறன்கொண்ட சாலைத் தடுப்பும், சுங்கச் சாவடியில் இருந்து 190 மீட்டா் தொலைவில் வெளியேறும் சாலையில் டயா் கிள்ளா் அமைப்பும் அமைக்கப்பட்டுள்ளது.

வெளியேறும் பாதையில் நிறுவப்பட்டுள்ள எலக்ட்ரோ-ஹைட்ராலிக் டயா் கிள்ளா், அனுமதியற்ற அல்லது தவறான திசையில் வாகனங்கள் செல்லும்போது, அதில் பொருத்தப்பட்டுள்ள கடினப்படுத்தப்பட்ட எஃகு முட்கள் தானாகவே மேலே உயா்ந்து வாகனத்தின் டயா்களைத் துளைக்கும் தன்மையுடையது.

சாலை மேற்பரப்புக்கு கீழே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இரண்டு சாலை தடுப்பு அமைப்புகளும், சாதாரண செயல்பாடுகளின் போது சாலையின் மட்டத்திலேயே இருப்பதால், அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் சீரான போக்குவரத்தை உறுதி செய்கின்றன என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.