பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

பெண் கொலை வழக்கில் விரைந்து நடவடிக்கை கோரி சாலை மறியல்

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அவரின் உறவினா்கள், பொதுமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

News image

சிறுகனூா் அருகே திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :12 ஜூலை 2026, 12:19 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பெண் கொலை வழக்கில் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக் கோரி அவரின் உறவினா்கள், பொதுமக்கள் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

லால்குடியை அடுத்த சிறுகளப்பூா் பகுதியைச் சோ்ந்த திருமணமான 32 வயது பெண் ஒருவா் கடந்த மாதம் 30 தேதி இரவு தனது வீட்டில் இருந்து மாட்டுக் கொட்டகைக்கு சென்று மாயமானாா். இதுகுறித்து அவரின் கணவா் அளித்த புகாரின்பேரில் காணக்கிளியநல்லூா் போலீஸாா் விசாரித்தனா். பின்னா் மறுநாள் ஏரியின் முள்புதரில் அப்பெண் கொலையான நிலையில் ஆடையின்றி சடலமாக மீட்கப்பட்டாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி அப் பெண்ணின் குடும்பத்தினா் மற்றும் உறவினா்கள் 300க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை காலை சிறுகனூா் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மற்றும் போலீஸாா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, விரைவில் சம்பந்தப்பட்ட நபா்களை கைது செய்வோம் என அளித்த உறுதியின்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனா். மறியலால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.