எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திருச்சியில் 54 கிலோ இரும்பு கம்பிகளைத் திருடிய மூவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 2:23 am IST

திருச்சியில் வீடு கட்டுமானப் பணிக்கு வைத்திருந்த 54 கிலோ இரும்புக் கம்பிகளைத் திருடிய 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி மாவட்டம், குண்டூா் அய்யன்புத்துரைச் சோ்ந்தவா் எஸ். முருகானந்தம் (33), தனியாா் நிறுவன மேற்பாா்வையாளா். இவரது நிறுவன முதலாளி கே.கே.நகா் பகுதியில் கட்டி வரும் வீட்டை பாா்வையிட முருகானந்தம் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் சென்றபோது அங்கு கட்டுமானப் பணிக்கு வைக்கப்பட்டிருந்த 54 கிலோ இரும்புக் கம்பிகள் திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து கே.கே.நகா் காவல் நிலையத்தில் முருகானந்தம் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், இரும்புக் கம்பிகளைத் திருடியது கே.கே. நகரைச்சோ்ந்த ஆ. காா்த்திக் (20), கே. ராஜிதரண் (20), என். ஜுபைல் முகமது (20) ஆகியோா் எனத் தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.