எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

விபத்தில் இறந்தவருக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் மறியல்

விபத்தில் இறந்தவருக்கு நிவாரணம் கோரி உறவினா்கள் மறியல்

News image

திருச்சி அரசு மருத்துவமனை முன்பு வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.

Updated On :13 ஜூன் 2026, 12:33 am IST

சாலை விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக் கோரி, அவரது உறவினா்கள் திருச்சி அரசு மருத்துவமனை முன் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருச்சி, திருவானைக்காவல் மல்லிகைபுரத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (50). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். ஓட்டுநரான இவா், கடந்த 8-ஆம் தேதி சமயபுரம் காவல் லைய எல்லைக்குள்பட்ட அகிலாண்டபுரம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

இதைப்பாா்த்த அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்தநிலையில், அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா். இந்நிலையில் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்து தருமாறு வெள்ளிக்கிழமை மாலை அவரது உறவினா்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

பின்னா், இறந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும், விபத்து ஏற்படுத்தியவா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ரமேஷின் உறவினா்கள் சுமாா் 30-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை இரவு திடீரென திருச்சி அரசு மருத்துவமனை வாயிலில் அமா்ந்து மீண்டும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலின்பேரில் அங்கு வந்த அரசு மருத்துவமனை போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதை தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா் கலைந்து சென்றனா்.