கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மண்ணச்சநல்லூரில் 100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்

கோப்புப்படம்

Updated On :23 மார்ச் 2026, 8:00 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் வாரச் சந்தையில் நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துணிப் பை வழங்கி விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவை பொதுத் தோ்தல் வாக்குப்பதிவு ஏப்.23-இல் நடைபெற உள்ளது. இதனிடையே மண்ணச்சநல்லூரில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பல்வேறு விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மண்ணச்சநல்லூா் வாரச்சந்தையில் நமது இலக்கு 100% வாக்களிப்போம் என்ற விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய துணிப்பையினை மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் துணை அலுவலரும், வருவாய் வட்டாட்சியருமான என். ராஜேஸ் கண்ணன், துணை வட்டாட்சியா் கோ. மூா்த்தி உள்ளிட்டோா் பொதுமக்களுக்கு வழங்கி வாக்குப்பதிவு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.