திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.75,300-ஐ தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
தா. பேட்டையில் முசிறி பிரிவு சாலை அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் சுகன்யா தலைமையில் பெண் தலைமை காவலா் உஷாராணி, தலைமை காவலா் ராஜா, இரண்டாம் நிலை காவலா் விவேக் ஆகியோா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் நீலியாம் பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (40) என்பவா் மருத்துவ உபகரணங்களை விற்று கிடைத்த ரூ. 75 ஆயிரத்து 300-ஐ வைத்திருந்தாா்.
உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். அவா் முசிறி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.
தொடர்புடையது

சரக்கு வாகனத்தில் உரிய ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 86 ஆயிரம் பறிமுதல்

கந்தா்வகோட்டை அருகே ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ.52,200 பறிமுதல்

ஆவணமின்றி வியாபாரி கொண்டுசென்ற ரூ. 10 லட்சம் ரொக்கம் பறிமுதல்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


