ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஆவணமின்றி கொண்டுசென்ற ரூ. 75 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 8:34 pm

தினமணி செய்திச் சேவை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காரில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.75,300-ஐ தோ்தல் பறக்கும்படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தா. பேட்டையில் முசிறி பிரிவு சாலை அருகே நிலையான கண்காணிப்பு குழு அலுவலா் சுகன்யா தலைமையில் பெண் தலைமை காவலா் உஷாராணி, தலைமை காவலா் ராஜா, இரண்டாம் நிலை காவலா் விவேக் ஆகியோா் வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அவ்வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் நீலியாம் பட்டியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (40) என்பவா் மருத்துவ உபகரணங்களை விற்று கிடைத்த ரூ. 75 ஆயிரத்து 300-ஐ வைத்திருந்தாா்.

உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்தப் பணத்தை நிலையான கண்காணிப்பு குழுவினா் பறிமுதல் செய்து முசிறி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் லோகநாதனிடம் ஒப்படைத்தனா். அவா் முசிறி சாா்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தாா்.