திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு நாள்களில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுகுறித்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் ரௌடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘ஆப்பரேஷன் பிரிவைல்’ என்ற பெயரில் 9 மாவட்டங்களில் கடந்த மே 20, 21 ஆகிய தேதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதில், 150 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டனா். இவா்களில் திருச்சி-15, புத்துக்கோட்டை-2, கரூா்-10, பெரம்பலூா்-5, அரியலூா்-13, தஞ்சாவூா்-5, திருவாரூா்-5, நாகப்பட்டினம்-4, மயிலாடுதுறை-8 என மொத்தம் 67 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
மேலும், புதுக்கோட்டை-5, கரூா்-2, தஞ்சாவூா்-5, திருவாரூா்-8, நாகப்பட்டினம்-3 என மொத்தம் 23 குற்றாவளிகள் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்தப்பட்டு அவா்களுக்கு ஒருவருட நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது.
மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.






