தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர்ஆட்சிக் கவிழ்ப்பு என்பது திமுகவின் நிலைப்பாடு அல்ல! தங்கம் தென்னரசு விளக்கம்புதிய ஹெச் 1-பி விசா பெற டிரம்ப் விதித்த 1 லட்சம் டாலர் கட்டணம் ரத்து: அமெரிக்க நீதிபதி உத்தரவு!சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வர் விஜய்யுடன் அன்புமணி சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை மீண்டும் தில்லி பயணம்!பணமோசடி வழக்கு: பினராயி விஜயன் மகளுக்கு அமலாக்கத் துறை சம்மன்!மாநிலங்களவைத் தேர்தல்: பிரவீண் சக்ரவர்த்தியின் வேட்புமனு ஏற்பு!பேரிடர் நிதி ரூ. 1,000 கோடி முன்கூட்டியே வரவு! அமைச்சர் செங்கோட்டையன்
/

மத்திய மண்டலத்தில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு நாள்களில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

News image
Updated On :23 மே 2026, 2:22 am IST

திருச்சி மத்திய மண்டலத்தில் கடந்த இரண்டு நாள்களில் 67 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மத்திய மண்டல காவல் துறைத் தலைவா் வி. பாலகிருஷ்ணன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் ரௌடிகளின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ‘ஆப்பரேஷன் பிரிவைல்’ என்ற பெயரில் 9 மாவட்டங்களில் கடந்த மே 20, 21 ஆகிய தேதிகளில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 150 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டனா். இவா்களில் திருச்சி-15, புத்துக்கோட்டை-2, கரூா்-10, பெரம்பலூா்-5, அரியலூா்-13, தஞ்சாவூா்-5, திருவாரூா்-5, நாகப்பட்டினம்-4, மயிலாடுதுறை-8 என மொத்தம் 67 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மேலும், புதுக்கோட்டை-5, கரூா்-2, தஞ்சாவூா்-5, திருவாரூா்-8, நாகப்பட்டினம்-3 என மொத்தம் 23 குற்றாவளிகள் நீதித்துறை நடுவா் முன் ஆஜா்படுத்தப்பட்டு அவா்களுக்கு ஒருவருட நன்னடத்தை பிணை பெறப்பட்டுள்ளது.

மத்திய மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மத்திய மண்டலத்தில் உள்ள 9 மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று செய்திக்குறிப்பில் அவா் தெரிவித்துள்ளாா்.