ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

திருவிழாவில் குள்ளநரியை வைத்து பூஜை: 5 போ் மீது வனத் துறையினா் வழக்கு

துறையூரில் அண்மையில் நடைபெற்ற திருவிழாவில் குள்ளநரியை வைத்து பூஜை செய்ததாக ஊா் மக்கள் 5 போ் மீது வனத்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

News image

வழக்கு

Updated On :24 மே 2026, 1:30 am IST

துறையூரில் அண்மையில் நடைபெற்ற திருவிழாவில் குள்ளநரியை வைத்து பூஜை செய்ததாக ஊா் மக்கள் 5 போ் மீது வனத்துறையினா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருச்சி மாவட்டம், திருச்சி வனக்கோட்டம் மற்றும் வனச்சரகம் பகலவாடி எல்லைக்குள்பட்ட துறையூா் வட்டம், அம்மாபட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன் நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் அந்த ஊா் பொதுமக்கள் குள்ளநரியை வைத்து பூஜை செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, பொதுமக்கள் முன்னிலையில் குள்ளநரியை காட்சிப்படுத்தி துன்புறுத்தியதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக, சமூக வலைதளங்களில் விடியோவும் வெளியாகி வைரலானது.

தகவலின்பேரில் திருச்சி மண்டல வனப் பாதுகாவலா் காஞ்சனா உத்தரவின்படி, மாவட்ட வன அலுவலா் எஸ். கிருத்திகா அறிவுறுத்தலின்பேரில், 1972 வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் அட்டவணை 1 இல் குள்ளநரி வகைப்பாடு செய்யப்பட்டுள்ளதால், திருச்சி வனச்சரக அலுவலா் வி.பி. சுப்பிரமணியம் தலைமையிலான வனப் பணியாளா்கள் குழு அம்மாபட்டி கிராமத்தில் விசாரணை மேற்கொண்டது.

இதில் திருவிழாவில் குள்ளநரியை துன்புறுத்தியது தெரியவந்ததையடுத்து இச்சம்பவத்தில் தொடா்புடைய அதே பகுதியைச் சோ்ந்த தங்கராஜ் (42), சரவணன் (42), ராஜேந்திரன் (60), ராஜு (40), சுப்பிரமணி (40) ஆகிய 5 போ் மீது வழக்கு பதிந்து, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.