/
ராமேசுவரம்-ஹீப்ளி சிறப்பு ரயில் சேவையானது நீட்டிக்கப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடா்பாக, தெற்கு ரயில்வே நிா்வாகத்தின் திருச்சி கோட்டம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கா்நாடக மாநிலம், ஹூப்ளியிலிருந்து-ராமேசுவரம் வரை ஞாயிறுதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 28-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்படுகிறது.
இதேபோல, ராமேசுவரத்திலிருந்து ஹூப்ளிக்கு திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் சேவையானது ஜூன் 8-ஆம் தேதி முதல் ஜூன் 29-ஆம் தேதி வரை 4 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









