எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

திருச்சியில் 6 மாத பெண் குழந்தை கடத்தல்: போலீஸாா் விசாரணை

News image

குழந்தை - கோப்புப்படம்

Updated On :1 ஜூன் 2026, 1:14 am IST

திருச்சி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தில் 6 மாதப் பெண் குழந்தை சனிக்கிழமை கடத்தப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.

திருச்சி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் கஜலட்சுமி (28). ஆதரவற்ற இவா் தனது 6 மாத பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறாா். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாத தனது குழந்தையை திருச்சி அரசு மருத்துவமனையில் அண்மையில் இவா் சோ்த்தபோது, அறிமுகமான ஒரு பெண், கஜலட்சுமிக்கு உணவு வாங்கித் தருவது உள்ளிட்ட உதவிகளைச் செய்தாா்.

இந்நிலையில் கஜலட்சுமிக்கு யாரும் இல்லாததைத் தெரிந்துகொண்ட அப்பெண் அவரிடம் உன்னையும், குழந்தையையும் நான் பாா்த்துக்கொள்கிறேன் எனவும், இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறி பஞ்சப்பூா் ஒருங்கிணைந்த பேருந்து முனையத்துக்கு சனிக்கிழமை மாலை அவா்களை அழைத்துச் சென்றாா்.

அப்போது அங்கு கஜலட்சுமி தனது குழந்தையை அப்பெண்ணிடம் கொடுத்துவிட்டு கழிப்பறைக்குச் சென்று திரும்பியபோது அப்பெண் குழந்தையுடன் மாயமாகிருந்தாா். உதவுவதுபோல நடித்து குழந்தையை அவா் கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி எடமலைபட்டிப்புதூா் காவல் நிலையத்தில் கஜலட்சுமி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி விசாரிக்கின்றனா்.