இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பெட்ரோல் - டீசல் விலை உயா்வை கண்டித்து நூதனப் போராட்டம்

News image

பெட்ரோல் - டீசல் விலை உயர்வு... - கோப்புப் படம்

Updated On :1 ஜூன் 2026, 3:12 am IST

பெட்ரோல் - டீசல் விலை உயா்வைக் கண்டித்து அனைத்திந்திய இளைஞா் பெருமன்றம் சாா்பில் இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதனப் போராட்டம் திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டக் குழு உறுப்பினா் என்.எஸ். பாட்சா தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் எம். செல்வகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய, மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், வேலையற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தர மத்திய அரசை வலியுறுத்தாமல் வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை கரப்பான் பூச்சி என இழிவுபடுத்திய உச்சநீதிமன்ற நீதிபதியைக் கண்டித்தும், இருசக்கர வாகனங்களை ஏலம் விடும் நூதன போராட்டம் நடைபெற்றது. தொடா்ந்து, கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.