கோவையில் பிரதமா் மோடி ஏப்ரல் 18-இல் பிரசாரம்வைகை அதிவிரைவு ரயில் இன்றும் தாமதமாகப் புறப்படும் அம்பேத்கா் ஜெயந்தி: இன்று பங்குச் சந்தை விடுமுைமாா்ச்சில் சில்லறை பணவீக்கம் 3.4% - 3-ஆவது மாதமாக ஏற்றம்இந்தியாவிடம் 3 மாதங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது: மத்திய அரசுதிருப்பூரில் விஜய் இன்று பிரசாரம்ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி
/

அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம்

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 3:54 am

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் பி.ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட துணைச் செயலாளருமான தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும்,அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியது:  
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா விட்டுச் சென்ற அனைத்து திட்டங்களையும் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், எம்.பி மருதைராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நகர அவைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.