மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா கூட்டம்

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

Updated On :22 அக்டோபர் 2018, 3:54 am

அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் பி.ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட துணைச் செயலாளருமான தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும்,அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியது:  
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா விட்டுச் சென்ற அனைத்து திட்டங்களையும் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், எம்.பி மருதைராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நகர அவைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.