அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் காந்தி பூங்கா அருகே அதிமுகவின் 47 ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அக்கட்சியின் நகரச் செயலர் பி.ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். திருச்சிராப்பள்ளி மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க துணைத் தலைவரும், அதிமுக மாவட்ட துணைச் செயலாளருமான தங்கபிச்சமுத்து, மாநில இளைஞரணி துணை தலைவர் அறிவு (எ) சிவசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அதிமுக மாவட்டச் செயலாளரும்,அரசு தலைமை கொறடாவுமான தாமரை எஸ்.ராஜேந்திரன் பங்கேற்றுப் பேசியது:
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகின்றனர். ஜெயலலிதா விட்டுச் சென்ற அனைத்து திட்டங்களையும் அவர்கள் சிறப்பாக செயல்படுத்தி வருகின்றனர் என்றார் அவர். ஜயங்கொண்டம் எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், எம்.பி மருதைராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக நகர அவைத் தலைவர் முருகேசன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி-நொய்டா எல்லையில் ஆலைத் தொழிலாளா்கள் போராட்டம் - வன்முறையால் பதற்றம்: உஷாா் நிலையில் தில்லி காவல்துறை

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்

ஈரான் கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த 2 கப்பல்கள்: 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறை!

நூதன முறையில் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

