தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மாணவர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்

மாணவர்கள் தங்களது தகுதி, திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:22 am IST

மாணவர்கள் தங்களது தகுதி, திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.
அரியலூர் பத்மஸ்ரீ வித்யாலயா பள்ளி மற்றும் பிளாசம் இன்டர்நேஷனல் பள்ளியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
மாணவர்கள் உயர்ந்த சிந்தனையுடனும், ஒழுக்கத்துடனும், மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். மாணவ, மாணவிகள் எப்போதும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் அறிவும், ஒழுக்கமும் இரு கண்கள் போன்றவை.
நமது  நாட்டைச் சேர்ந்த பலர் உலகளவில் சாதனை படைத்து வருகின்றனர். நமது நாட்டு மாணவர்களுக்கு சர்வதேச  அளவில் போட்டியிடும் தகுதியும், திறமையும் அதிகமாகவே இருக்கிறது. 
அத்தகைய தகுதி ஒவ்வொருவருக்கும் உண்டு  என்பதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். மாணவ,மாணவிகள கடின உழைப்புடனும், விடாமுயற்சியுடனும், பணிவுடனும், ஒழுக்கத்துடன் செயல்பட்டால் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்றார் அவர். பின்னர் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார்,அரியலூர் கல்வி மாவட்டக் அலுவலர் அரி. செல்வராஜ் , பள்ளி துணை  ஆய்வாளர் பழனிசாமி, ராஜேஷ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் ராஜேஷ், ஆர்ஆர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ரேவதி உள்ளிட்டோர் பேசினர். 
 பள்ளி நிர்வாகி பத்மபிரியா வரவேற்றார். பள்ளி நிர்வாகி வாணிசிவம் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.