பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மாணவர்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும்

மாணவர்கள் தங்களது தகுதி, திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.

Updated On :13 பிப்ரவரி 2019, 9:22 am IST

மாணவர்கள் தங்களது தகுதி, திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்றார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டி. சுமதி.
அரியலூர் பத்மஸ்ரீ வித்யாலயா பள்ளி மற்றும் பிளாசம் இன்டர்நேஷனல் பள்ளியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:
மாணவர்கள் உயர்ந்த சிந்தனையுடனும், ஒழுக்கத்துடனும், மற்றவர்களின் உணர்வுகளை மதித்து நடக்க வேண்டும். மாணவ, மாணவிகள் எப்போதும் ஒழுக்கத்துடன் நடந்துகொள்ள ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். ஏனெனில், ஒவ்வொருவருக்கும் அறிவும், ஒழுக்கமும் இரு கண்கள் போன்றவை.
நமது  நாட்டைச் சேர்ந்த பலர் உலகளவில் சாதனை படைத்து வருகின்றனர். நமது நாட்டு மாணவர்களுக்கு சர்வதேச  அளவில் போட்டியிடும் தகுதியும், திறமையும் அதிகமாகவே இருக்கிறது. 
அத்தகைய தகுதி ஒவ்வொருவருக்கும் உண்டு  என்பதை, மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்த வேண்டும். மாணவ,மாணவிகள கடின உழைப்புடனும், விடாமுயற்சியுடனும், பணிவுடனும், ஒழுக்கத்துடன் செயல்பட்டால் வாழ்வில் எளிதில் வெற்றி பெறலாம் என்றார் அவர். பின்னர் போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார்,அரியலூர் கல்வி மாவட்டக் அலுவலர் அரி. செல்வராஜ் , பள்ளி துணை  ஆய்வாளர் பழனிசாமி, ராஜேஷ் ஐஏஎஸ் அகாதெமி இயக்குநர் ராஜேஷ், ஆர்ஆர் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் ரேவதி உள்ளிட்டோர் பேசினர். 
 பள்ளி நிர்வாகி பத்மபிரியா வரவேற்றார். பள்ளி நிர்வாகி வாணிசிவம் நன்றி தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.