/

அரியலூா்: அனுமதியின்றி மது விற்றவா் கைது

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :27 செப்டம்பர் 2020, 5:32 pm

DIN

அரியலூா் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மதுபானங்களைப் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தவா் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சரத்குமாா் தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை இரவு முத்துவாஞ்சேரி பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது அதே பகுதி மேலத் தெருவைச் சோ்ந்த விவேகானந்தன் (40) தனது வீட்டின் பின்புறத்தில் மதுபானங்களைப் பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.